சமீபத்திய புதசெவி

சாருவும், கமினேவும், நம்ம இசைப்புயல்களும்

எழுத்தாளர் சாரு, தன்னுடைய கண்ணதாசன் : வைரமுத்து : மனுஷ்ய புத்திரன் : என்.ஸி.வசந்த கோகிலம் : ஷ்ருதி ஹாசன் என்று பதிவில் இன்றைய வாழ்க்கை, இன்றைய காதல் எல்லாமே மாறிப் போய் விட்டது. என்று அதற்கு உதாரணமாக கமினே படத்தில் ஒரு காட்சியயை சுட்டுகிறார்.

*********************
கமீனே படத்திலிருந்து ஒரு உதாரணம். காதலனும் காதலியும் கல்லூரி மாணவர்கள். காதலி கர்ப்பமாகி விடுகிறாள். காதலன் அதிர்ச்சி அடைகிறான். “உன்னிடம் எத்தனை முறை சொன்னேன்; காண்டம் பயன்படுத்துகிறேன் என்று. நீதானே

நான் ’ ஹோம் சயின்ஸில் ’ கில்லாடி என்று சொல்லி என்னை ஏமாற்றினாய்? ” என்று கத்துகிறான். ஏனென்றால், அவனுக்கு எதிர்காலம் பற்றிய ஏராளமான கனவுகள் இருக்கின்றன. இவள்தான் ‘இது சேஃப் பீரியட்; நாம் செக்ஸ் வைத்துக் கொண்டால் ஒன்றும் ஆகாது ’ என்று சொல்லி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவள்.

” சரி, இப்போது அபார்ஷன் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை ” என்கிறான் அவன்.

“அப்படியானால் இது மூன்றாவது அபார்ஷனாக இருக்குமே; பண்ணலாமா? அது சாத்தியப்படுமா? ” இது காதலி.

“அய்யய்யோ... மூன்றாவது அபார்ஷனா? அப்படியானால் மற்ற இரண்டு? ”

“அதையெல்லாம் கிளறாதே. அதெல்லாம் பழைய கதை... ”

இதுதான் இன்றைய காதல். என்றாலும் மனித உணர்வுகள் ஆயிரம் ஆண்டுகளானாலும் மாறுவதில்லை; ஒரே விதமாகத்தான் இருக்கும் என்பதற்கு அவர்கள் பாடும் ’ பெஹ்லி பார் மொஹ்பத் கீ ஹை; ஆக்ரி பார் மொஹ்பத் கீ ஹை ’ (இதுதான் என் முதல் காதல்; இதுதான் என் கடைசிக் காதல்) என்ற பாடல் உதாரணம்.

********************

கமீனே படத்தை இந்தக் கட்டுரை படித்து பல நாள் ஆனப்பின்பு படம் பார்த்தேன். இவர் கூறிய இந்த கருத்து உறுத்திக்கொண்டேயிருந்தப்படியால், கொஞ்சம் உண்ணிப்பாகவும் பார்த்தேன். ஆனால், சாரு சொன்னபடி படத்தில் காட்சிகள் இல்லை, அல்லது அவர் சொல்லிய வண்ணமே இல்லை. ஆனால், வேறு மாதிரியாக வருகின்றது.

காதலன் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்தில் பணி புரிகிறான். பெண் வேலையில் இல்லை. (சாரு இருவரும் கல்லூரி மாணவ,மாணவியர் என்று சொல்லுகிறார்)

தான் கர்பம் என்று நாயகி சொல்லுகிறாள். வேண்டுமென்றால் இன்னோரு முறை சோதித்துப் பார்க்கலாம் என்று சொல்லுகிறான் நாயகன்.
இது மூன்றாவது முறை என்று நாயகி சொல்லுகிறாள்.

ஏன் முதல் தடவையே என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறான். நீ வருத்தப்படுவாய் என்று தான் சொல்லவில்லை என்று சொல்லுகிறாள் நாயகி.

எங்கே போனது உன்னுடைய அறிவியல். எல்லாம் எனக்குத் தெரியும், பாதுகாப்பான காலம் என்று கூறினாயே என்று அவளை திட்டுகிறான்.

இதனைத் தொடர்ந்து 8 வாரங்களுக்கு முன் என்று அவர்கள் கலவி நடந்த தினம் காட்டப்படுகின்றது.

அதன் பின்னர், நாயகி நான் பேசிவிட்டேன், 4 மணி நேரம் தானாம். அன்றே வீடு திரும்பிவிடலாமாம் என்று கருக்கலைப்புக் குறித்து பேசுகிறாள். நாயகன் என்னை இந்த கொலைக்கு துணைக்கழைகாதே என்கிறான்.

அப்படியென்றால், கருக்கலைப்பில் உனக்கு விருப்பம் இல்லை என்று நாயகி மகிழ்கிறாள். இதற்குப் பின் நடக்கின்ற உரையாடல்களில் நாயகன் தன்னுடைய வருங்கால திட்டத்தினை விவரிக்கின்றான்.

பின்னர், அந்தப் பெண், கெஞ்சி, கொஞ்சி,மிஞ்சி, கடைசியில் தன்னுடைய அண்ணன் பெயரை வைத்து மிரட்டி சம்மதிக்க வைக்கின்றாள். அடுத்த நாளே திருமணம் என்கிறாள். அவன் வேண்டா வெறுப்பாக என்னிடம் புதிய ஆடைகள் கூட இல்லை என்கிறான். பரவாயில்லை என்று கூறி கட்டியனைத்து, பின்னால் நிற்கும் நண்பர்களிடம் சாதித்து விட்டதாக கையயை கை கட்டை விரலை உயர்த்துகிறாள். திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. நாயகன் வேண்டா வெறுப்பாகவும், நாயகி உற்சாகமாகவும். அப்போது பாடல் துவங்குகின்றது.

*******************

சாரு, அந்தப் பெண்ணுக்கு அது மூன்றாவது கரு என்று புரிந்துக்கொண்டுள்ளார். அப்படி இல்லை என்று மேலே சொன்ன உரையாடல்களில் தெரியும். அந்த திரைப்படத்தில் அந்தப் பெண்ணின் கதாப்பாத்திரத்தை உற்று நோக்கினால், அவள் அத்தகைய நிலையில் இருக்க வாய்புக்கள் குறைவு என்று கொள்ளலாம்.

அந்தப் படத்தின் நாயகியின் கதாப்பாத்திரத்தை இயக்குனர் சொல்லிய விதத்திலும், அவள் குடும்பத்தினர் குறித்து சொல்லிய விதத்திலும், இதற்கு முன்னர் அவளுக்கு காதல் ஏற்பட்டதில்லை என்பது தெரியவரும். மேலும் , அவளுடைய அண்ணன், ஒரு பெரிய புள்ளியின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றது பின்னால் தெரியவரும். அதனால், நாயகனை திருமணம் நோக்கி நகர்த்த நாயகி வலுக்கட்டாயமாக பாதுக்காப்பற்ற உடலுறவில் நாயகனை ஆழ்ந்துவதாகவும் புரிந்துக்கொள்ளலாம்.

பெண் கர்பம் என்பதை குறைந்தப்பட்சம் 20 நாட்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், உடலுறவு கொண்ட 8 வாரங்கள் கழித்து தான் நாயகனுக்கு அவள் சொல்லுகிறால். ஆனால் அதற்கு முன்னர் இரண்டு முறை சோதித்து உறுதி செய்துகொள்கிறாள். இதை நான் படத்தை ஊன்றிப் பார்த்தால் நாயகியின் குணாதியத்தோடு ஒன்றிப் போகும். நாயகனை கவர்வதற்காக தனக்கும் திக்குவாய் என்று சொல்லியிருப்பாள். தன்னுடைய அரசியல்வாதி அண்ணன் பற்றி உண்மையயை மறைத்திருப்பாள். இவையனைத்தும் நாயகனை மணந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செய்திருப்பாள்.

சரி, சாரு அப்படி கூறியதால் என்ன நடந்துவிட்டது. அவர் கூறியதில் என்ன தவறு என்று கேட்கலாம். இதில் சரி, தவறு என்று சொல்ல ஒன்றுமில்லை. அவருக்கு இந்த காட்சி புரியவே இல்லை. அதை வைத்து அருமையான உணர்வு என்று சொல்லுகிறாரே என்ற ஆதங்கம் மடுமே. ஒரு காட்சியயை எடுத்துக்காட்டாக காட்டுபவர், அந்தக் காட்சி எதற்காக வந்தது, அதில் நடத்தவர்களின் மனநிலை என்ன, அவர்களின் பின்புலம் என்ன என்று சரிவர புரிந்துக்கொள்ளாமல், மூன்று என்றவுடன் ,மூன்று முறை கருக்கலைப்பு. இன்றைய காதல் எல்லாம் மாறிப்போய்விட்டது என்று சொல்லுகிறார். (திரைப்படம் நம் வாழ்வை எப்படி பிரதிபலிக்கின்றது என்பது ஒரு புறம் இருக்கும்பொழுது, திரைப்படத்தைப் பார்த்து தான் நாம் காதல் மாறிவிட்டது என்று புரிந்துக்கொள்ளனும் போல )

ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்வது என்று விசால் பரத்வாச் தான் முதன் முதலில் வைத்தாரா என்ன, காதல் மாறிவிட்டது என்று சொல்ல. களத்தூர் கண்ணமாவிலிருந்து எத்தனை எத்தனை படங்கள். திருமணத்திற்கு முன் உறவு என்பதில் புதிய விவரம் ஒன்றுமில்லை. அந்த பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காதலர்கள் (சாருவின் கனவில்/கற்பனையில்) என்பது தான் சாரு காதல் மாறிவிட்டது என்று சொல்லக் காரணம் என்று சொல்லலாமா. அப்படி சொல்ல அந்தக் காட்சியில் முகாந்திரம் இல்லை. எனவே சாரு சொன்னதுப் போல், காதல் தலைகீழாக ஒன்றும் மாறிவிடவில்லை. (மாறக்கூடாது என்றோ, மாறினால், சமூகம் கெட்டுவிடும் என்றோ நான் இங்கே விவாதிக்க வரவில்லை.)

இந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்த மிக அழகான பாடல் வருகின்றது. பாடல் என்பது படத்தோடு ஒட்டி வந்தால் ரசிக்கலாம். நல்ல பாடல் வரிகள், நல்ல இசை இருந்தாலும்,படத்துடன் ஒட்டி வரவில்லை என்றால் கொஞ்சம் இடக்கரக்கல் தான். படத்தில் அந்தப் பாடல் ஒரு ஆண் குரலில் வருகின்றது. ஆனால், என் பார்வையில், அந்தப் பாடல் பெண் பாடுவதாகத் தான் இருக்க வேண்டும். ஏன் என்றால், அந்த திருமணத்தில் ஒரு ஆல்பா பெண்ணாக எல்லாவற்றையும் அவளே செய்கிறாள். ஆனால், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளமா என்ற குழப்பம் வந்ததோ, அல்லது நாயகன் தான் பாட வேண்டும் என்ற ஈகோ குழப்பமோ தெரியவில்லை, அந்தப் பாடல் ஒரு ஆண் குரலில் பாடுகின்றது.

இந்தப் பாடல் நல்ல பாடல் செவிக்கினிய பாடலாக இருப்பதால் மட்டுமே, இது படத்திற்கு இயந்த வந்த பாடல் என்று கொள்ளவே முடியாது. என்னைக் கேட்டால், அந்தப் படத்தில் அந்த இடத்தில் பாடலே தேவையில்லை. பாடல் பாடும் மனநிலையில் அந்த நாயகன் இல்லை. பின்னர் எங்கே உருகி உருகி பாடல் வரும். அது நிற்க !

காதல் மாறிவிட்டதா....? காதல் உணர்வுகள் மாறிவிட்டதா...? ஆமாம், மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. நேற்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் நிச்சயம் பல மாறுதல்கள் உண்டு. ஆனால் நிச்சயமாக அது கருக்கலைப்பின் எண்ணிக்கையில் இல்லை !

***************************

சமூக நீதியைக் கட்டிக் காக்கும் அனுசா ஐயர்

"தமிழகத்தில் இன்றைக்கு சாதாரண மனிதன்கூட தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்ள கூச்சப்படுகிறான். சுயமரியாதை உணர்வும், பகுத்தறியும் மனப் பான்மையும் பாமரனிடம்கூட பட்டொளி வீசுகிறது. அதுவே தமிழகத்தை `தாண்டினால் அரசியல் தலைவர்கள் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை இன்றைக்கும் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே அமைத்துக் கொள்கின்றனர்" இது சமீபத்தில் தா.பாண்டியன் பேசியது.

1944ல் அறிஞர் அண்ணா முன்மொழிந்தது தான் இந்த பெயருக்கு பின்னால் இந்த சாதிப்பெயரை நீக்குதல் என்று நினைவு. நம் தாத்தா பெயரில் சாதி இருந்திருக்கும் , நம் தந்தையார் பெயரில் சாதி நீங்கி பெயர் மட்டுமே. இப்பொழுது நம்முடைய பெயரிலும் சாதி கிடையாது. சாதியை பெருமையாக பேசித்திரிபவர்களுக்கும் கூட, அனைத்து மக்களும் ஒன்று என்று நினைப்பு வருவதற்கும் ஏதுவான, இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப் பெயரை நீக்குதல் என்ற தீர்மானத்தை 1944ல் அறிஞர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்டு, பெரியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கவும் பட்டது என்ற நினைவு. (தவறிருந்தால் சுட்டுங்கப்பா )

மும்பை போன்ற நகரங்களில் பல காலம் முன்பு தமிழகத்திலிருந்து குடியேறிய தமிழர்கள் சிலர் இந்த சாதிப் பெயரை இன்னும் தங்கள் பெயரின் பின்னால் போட்டுக்கொண்டு தான் வருகின்றார்கள். அவர்கள் தமிழர்கள் தான், ஆனாலும், வெளிமாநிலத்தில் இருப்பதால், தெரிந்தோ தெரியாமலோ இதனை வழக்கமாக்கிக் கொண்டியிருக்கலாம். ஆனால், இதனை அங்கிருக்கும் தமிழர்கள் அனைவரும் செய்வதில்லை. குறிப்பாக நான் கேள்விப்பட்டது வரை பிள்ளை, ஐயர், ஐயங்கார் இந்து மூன்று சாதிப்பெயர்களே மிகுந்து, பெருவாரியாக இருக்கின்றது. அது கிடக்க !

ஆனால், தமிழகத்தில் சட்டதிட்டம் போல் இருக்கின்ற இந்த ஒழுங்கு, இன்று திரைப்படத்தில் தோன்றும் ஒரு நடிகையால் பொதுவில் வைத்து மீறப்படுகின்றது. தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த, உன்னை போல் ஒருவன் படத்தில் நிருபராக நடித்த அனுசாவின் பெயர் ஐயர் என்று முடிகின்றது.

இந்த ஒரு பெண் தான் பெயர் வைப்பதால் சமூக நீதியே அடிப்பட்டுவிடப்போகின்றதா என்று கேட்டால், எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் உண்டு. அது இதுவாக இருந்துவிடக்கூடாது என்பது என் கவலை. சாதிப்பெயரை பின்னால் வைத்து திரியும் எந்த சாதி மனிதர்களாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. சினிமாவில் பெரும் புகழ் சம்பாதித்த ஏ.வி.மெய்யப்பட்ட செட்டியாரின் மகன்கள் இன்றும் ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.குகன் மட்டுமே.

அனுசா என்பது உங்க பெயர், ஐயர் என்பது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று ஆற்றங்கரையில் வைத்து அவர் கன்னத்தில் சப்பென்று அறைந்து கேட்கும் வண்ணம், யாராவது ஒரு படம் சீக்கிரம் எடுத்தால் தேவலை !

காலம் காலமாக அடிமைத்தனத்தினை பேன முடிகின்றது. ஆனால் ஒரு ஒரு நூற்றாண்டு கூட ஒரு முற்போக்குத் சிந்தனையை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

இதற்கு அரசு ஆணை ஏதேனும் இருக்கின்றதா..??

அப்படி இல்லையென்றால், அண்ணாவின் நூற்றாண்டில் அரசு ஏன் ஒரு ஆணை பிறப்பிக்க கூடாது..?

அண்ணாவின் நூற்றாண்டில் இதனை விட ஏற்ற மரியாதை வேற ஒன்றும் இருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

நம்ம குணக்குன்று வினையூக்கியின் சிறுகதை. அவரும் பாரதிராசாவின் பாலுவைத் தான் துணைக்கு அழைக்கிறார். அதையும் ஒரு பார்வை பாருங்க.

அண்ணல் செந்தழல் ரவி வாய்க ! வாய்க !

மிக மிக மொக்கையான மட்டுமல்ல தொல்லையான விவகாரமிது. இருந்தாலும் சில விசமிகள் இகலப்பை கையில் இருப்பதால் போகின்ற இடங்களில் எல்லாம் வாந்தி எடுத்து வைப்பதால் ஒரு தன்னிலை விளக்கமாகவும், இந்த பதிவு வழியாக நான் கடந்து வந்த சில முக்கிய (அந்த முக்கிய இல்லீங்கோ ) நிகழ்வுகளையும் தொகுத்து வைக்கின்றேன். நேரமில்லாதவர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்திற்கும், நேரம் இருப்பவர்கள் முதல் பாகத்திலிருந்தும் படிக்கலாம்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பாகம் - ஒன்று

சூலை 20, 2007ல் முதல் பதிவு.

இந்த முதல் பதிவு வருவதற்குள்ளாகவே ஒரு முறை பெயர் மாற்றமும் நிகழ்ந்தது. (பழைய பெயரில் இடப்பட்ட பின்னுட்டம் இங்கே பார்க்கலாம்.)

நான் பதிவெழுத வரும் முன்னே அடிக்கடி படித்த ஒரு தளம் விடாது கருப்பு ( அந்த தளத்தில் இப்போதைக்கு அனைத்து இடுகைகளும் நீக்கப்பட்டவிட்டதாக தெரிகின்றது). பெரியார் குறித்தான் பதிவுகள் அந்த தளத்தில் தொடர்ந்து வந்தது என்பதே அதை நான் தொடர்ந்து படிக்க காரணம். அந்த தளத்தில் சில நேரங்களில் பதிவுலக சண்டைகள் வரும், (இப்பதிவைப் படிக்கும் புதிய பதிவர்கள் போலவே) குழப்பத்துடன் படித்துவிட்டு, அன்னம் போல தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவது என் வழக்கம்.

ஆக்ச் 7, 2007 - பதிவுலகில் பலர் கொடுத்துள்ளதைப் போலவே என் தளத்தில் விடாது கருப்புவுக்கு சுட்டி கொடுத்தேன். அதை நீக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார் செந்தழல் ரவி. சுட்டி கொடுப்பது என் உரிமை என்றாலும், வலையுலகில் முதலில் உரையாடியவர், நண்பர், கேட்டுக்கொண்டதால் அந்த சுட்டி நீக்கப்பட்டது.

ஆக்ச் 12,2007 - செ.ரவியின் நண்பர்களில் ஒருவரான ஓசை செல்லா விடாது கருப்புவிடமிருந்து வந்த மின்னஞ்சல் என்று ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவை டோண்டுவும் வெளியிட்டார் என்பதாகவே நினைவு. (சுட்டியில்லை, நீக்கிவிட்டார் போலும்). அந்தக் காலக்கட்டத்தில் ஓசையார் விடாது கருப்புவின் தளத்திற்கும் சுட்டிக் கொடுத்திருந்தார்.

அக்ட் 16,2007-உரையாடியில் மட்டுமே தொடர்பிலிருந்த நண்பர் கோவி.கண்ணனை சிங்கையில் வைத்து சந்தித்தேன். அதை அவர் பதிவாகவும் வெளியிட்டார்.( இதிலிருந்த படத்தை வம்பர்கள் வம்பளக்க பயன்படுத்தியதால், இந்தப் பதிவும் நீக்கப்பட்டுவிட்டது). அதைக் கண்டதும் செ.ரவி (அது நாள் வரை உரையாடியில் நண்பராக பழகிய அதே ரவி) இப்படி ஒருஏகாடியப் பதிவு போட்டார். அதில் தனக்குத் தானே திட்டத்தின்படி, அவதூறாக பின்னுட்டமிட்டு கொண்டாடினார். அதற்கான நாகரீகமான எனது எதிர்வினை இங்கே.

கோவி.கண்ணன் மூர்த்தியுடனான நட்பை முறிக்கவில்லை என்பதால், கோவி.கண்ணன் கைத் தொட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று குதறுவது செந்தழலின் வழக்கமாக ஆகிவிட்டியிருந்தது. (இன்று போலியின் அல்லக்கை என்று விளிக்கப்படும் பதிவருடன் செந்தழல் ரவியின் தொடர்பு இன்றும் தொடர்வது உங்களுக்கு ஆச்சரியமளிக்குக் கூடாது. நட்பு என்றால், அவர் வைத்தால் மட்டுமே நட்பு. பதிவுலகம் தாண்டி நட்பை பேணுவது அவருக்கு மட்டுமே கள்ள மன்னிக்கவும் உள்ள உரிமை. )

அதன் பின்னர் பல முறை என்னைச் சீண்டியபடியே விசத்தனமாக பதிவுகள் போட்ட வண்ணமே இருந்தார் என் முன்னாள் நண்பர் செந்தழல் ரவி. அந்த பதிவுகள் பலவற்றை ஏனோ நீக்கிவிட்டார். (மீண்டும் படித்தால் தன் மீதே அவருக்கு வெறுப்பு வந்திருக்கும் என்பதால் இருக்குமோ)

பிப். 22,2008-இதற்கிடையில் பிரச்சனைக்குரிய விடாது கருப்பு தளம் கைமாறுவதாகவும், பொறுப்பிலிருந்தவர்கள் விலகுவதாகவும் ஒரு பதிவு வந்தது. விடாது கருப்பு தளத்தினை படித்தவர் என்ற முறையில் அங்கே என்னுடைய பின்னுட்டத்தை பதிந்தேன். விடாது கருப்புவின் மின்னஞ்சலை வெளியிட்டு, மகிழ்ந்த செல்லா, இடையில் விடாது கருப்புவின் தீவிர எதிர்ப்பாளராக மாறிவிட்டியிருந்தார். தானும் இதே தளத்திற்கு ஆதரவு வழங்கினோம் என்பதை மறந்து, பொங்கிய ஓசை செல்லா தன்னுடைய பதிவில் ஒரு கசட்டு பதிவை வெளியிட்டார். அதற்கு நான் இட்ட நாகரீகமான எதிர்வினை.

இதற்கிடையில் புதிதாக பதிவர்கள் வரத்தொடங்கினார்கள். தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் ஒளிர்ந்துக்கொண்டியிருந்தவர்களை கொஞச்ம் அப்புறம் தள்ளி புதியவர்கள் ஒளிவிடத்தொடங்கினார்கள். அதுப் போன்ற ஒரு பரபரப்பு பதிவர் வசந்தம் ரவி.

காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுப் போல், வசந்தம் ரவியும் போலி என்று செ.ரவி சதிராடினார்.

போதுமடா சாமி உங்கள் பதிவுலகம் என்று அவர் பதிவை மூடிவிட்டே போய்விட்டார். இன்றும் அத்தளம் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாமல் இருக்கின்றது. சுவையான பல தரப்பட்ட பதிவுகளை வழங்கி, பதிவுலகில் அலக்சா சுரத்தை உருவாக்கிய வித்தகர். (கணிணித்துறையில் கைத்தேர்ந்தவர் என்பதற்காவே இவரும் போலி என்று சொல்லியதும் நடந்தது )

அடுத்து, யாரைக் கொத்துவது என்று காத்திருந்த செ.ரவி, கோவி.கண்ணன், ரத்னேஷ் பதிவுப் பக்கம் அதிகம் வருவதைக் கண்டு, ரத்னேஷும் போலி என்று பிதற்றினார். பதிவுப் போட்டார். அசாமிலிருந்தவண்ணம் கிடைத்த அரைகுறை வலைத்தொடர்பில் ரத்னேஷ் இதை படித்திருக்க கூட மாட்டார்.ஆனால், அவர் பதிவை விட்டோடினார் என்றும் சொல்லி மகிழ்ந்தார் செ.ரவி. அ

கோவி.கண்ணனை சிங்கையில் பதிவர்கள் சந்தித்தால் ,இங்கே இதற்கென்றே இரண்டு பதிவுகளை வைத்து மேய்க்கும் செந்தழல் ரவி பதிவில் அவதூறு பதிவுகள் அனல் பறக்கும். ஆனால், அது நாகரீகமான பதிவுகளாக இருக்காது. (சுட்டி தேட பொறுமை இல்லை. நண்பர்கள் சுட்டி கிடைத்தால் பின்னுட்டமிடலாம்). கருத்து கந்தசாமி என்று கோவி.கண்ணனுக்கு பெயர் சூட்டி, இவர் இட்ட பதிவுகளின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. திடுமென்று வரும், திடுமென்று நீக்கப்படும். இடையில் இவர் (செ.ரவி) போதைக்கு ஊறுகாயாக என் மீதும் அனல் வீசும்.

சென்னையில் நான் பதிவர்களை சந்திக்க அழைத்தப் பொழுது, தன்னுடைய அரிப்பை இப்படி வெளிப்படுத்தினார்.

அது கிடக்க ! கோவி.கண்ணனுக்கும் இவருக்கு இருந்த பிரச்சனையில், கோவி.கண்ணனுடன் யார் பேசினாலும் இவருக்கு வயித்தெரிச்சல் வந்து இப்படி பதிவு போடுவார். (இவர் பதிவு, இதற்கு எதிர் பதிவு என்று பல பதிவுகள் இருக்கின்றன. பொழுதிருந்தால் தேடி படித்து பார்க்கலாம் )

இது அப்படியே போலியின் செயல் மாதிரி இருக்கே என்று நீங்க நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் அது தான் உண்மை. போலியின் வன்முறைக்கு சற்றும் குறைவில்லாத வன்முறையாளர் செ.ரவி.

நெஞ்சினில் துணிவிருந்தால், மனதினில் உண்மையிருந்தால் செ.ரவி இதை மறுக்கட்டும்.

அன்று வலைபதிந்த மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டு. அவர்கள் மானசீகமாக காறி உமிழ்வார்கள்.

ஃஃஃஃஃஃஃஃஃ

பாகம் - இரண்டு

இன்று "டிபிசிடி நரகலானான்" என்று இவர் எழுதியவுடன், புதியவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பிவிடக்கூடாதே என்று இந்த பதிவு.

சரி, இப்ப நரகல் என்று போகிற போக்கில் செந்தழல் ரவி பின்னுட்டம் போடுவார், உண்மைத் தமிழன் அதை வெளியிடுவார்.

இதற்கு பேரன்ன...?

அவதூறு என்று நீங்கள் சொன்னால் அது தவறு !

உண்மைத்தமிழனுக்கெதிராகவோ, அல்லது செந்தழல் ரவிக்கெதிராகவோ, ஏதேனும் நீங்கள் எழுதினால் அது தான் அவதூறு.

என்ன நியாயமோ! என்ன அறமோ !

அது கிடக்க !

அண்ணல் செந்தழல் ரவி பெங்களூருவில் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தினார். எப்போது. ஆக்ச் 2008ல்.

எதேச்சையாக கிழுமத்தூர் மகேந்திரன் இந்தியா வந்திருப்பதாக தகவல் தெரிந்தது. பதிவர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளட்டும் என்று என் பதிவில் வெளியிட சொன்னார்.

அந்த எண்ணைக் கொண்டு கிழுமத்தூர் மகேந்திரனை அண்ணல் செந்தழல் தொடர்பு கொண்டு பெங்களூருவிற்கு அழைத்தார். அவரிடம் என்னுடைய தொலைப்பேசி எண்ணும் கேட்டுள்ளார். நல்ல வேளை அவர் கொடுக்கவில்லை.

வேறு சில பெங்களூரு நண்பர்களிடத்தும் என்னுடைய அலைப்பேசி எண்ணை இவர் கேட்டுள்ளார். நல்ல வேளை அவர்களும் கொடுக்கவில்லை.

அட நரகல் என்று சொல்லப்பட்டவர் கிழுமத்தூரும் நானும்...இவர் ஏன் பேச வேண்டும். பின்னர் என் அலைப்பேசி எண் கேட்க வேண்டும்.

அட இத்தனைக்கும் என் மின்னஞ்சல் முகவரி தெரியும்..அப்படி தேவையிருந்தால் என்னிடமே கேட்டியிருக்கலாம்.

இந்த பெரிய மனது உங்களுக்கு வருமா...நரகல் என்று சொல்லப்பட்டவரிடம் நீங்கள் மீண்டும் தொடர்பு கொள்வீர்களா...அதனால் தான் அவருக்கு அண்ணல் பட்டம். (அட ! பட்டம் கொடுத்தால் கூட நல்ல பட்டம் தான் கொடுக்க வருது நமக்கு..)

பதிவர் சந்திப்பின் முயற்சிக்குப்பின், பெப் 2009ல்,அண்ணல் செந்தழல் ரவி அவர்கள் என்னை டிவிட்டரில் தொடர அனுமதி கோரினார்.

துச்டனைக் கண்டால் தூர விலகு என்று தான் நமக்கு போகத் தெரியும்.....கை கோர்க்க நாம் என்ன அவர் போல அண்ணலா..?? பின் தொடர்ந்து அவரை என்னை போட்டு ஆபாசமாக கும்முவதை ரசிக்க நாம் என்ன மாசோகிச்டா...? தடை செய்துவிட்டேன். (அதற்காக அவர் அத்துடன் நின்றுவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. வேறு பெயரில் வந்து எப்போதோ அவர் நினைத்ததை சாதித்திருப்பார் )

எத்தனை பெரிய மனசு அண்ணலுக்கு ! எத்தனை சிறிய மனசு எனக்கு !

சரி, நீங்கள் இப்படி நரகல் என்று ஒருவரை சொல்வதாக வைத்துக்கொள்வோம்.

அந்த நபரை நீங்கள் மீண்டும் சந்திக்க விரும்புவீர்களா..? மாட்டீர்கள்..?

டிவிட்டரில் பிந்தொடருவீர்களா...? மாட்டீர்கள்..?

அலைப்பேசி எண் கேட்பீர்களா...? மாட்டீர்கள்..?

ஆனால் அண்ணல் செ.ரவி அனைத்தையும் செய்தார். செய்வார்.

ஏன் இப்படி செய்கிறார்...புதசெவி என்று நீங்கள் கேட்க முடியாது..கூடாது...

அவர் எதற்காக இதையெல்லாம் செய்தார், என்று ஒரு சிலரிடம் மட்டும் கூறியிருப்பார்.

அந்த விவரங்கள் அடுத்த 2010ல் போலி விவகாரத்தை மீண்டும் இளாவோ, சிறில் அலெக்சோ, அல்லது டோண்டுவோ, அல்லது உண்மைத்தமிழனோ பதிவிடும் போது கூறுவார்.

போலி விவகாரத்தில் என்னுடைய நிலை தெள்ளத் தெளிவாக ஏற்கனவே, விம்பார், சபீனா, நிர்மா போன்றவைகளால் பள பளவென்று விளக்கியாயிற்று.

போலிப் பதிவுகளுக்கும் எனக்கும் நேரடித்தொடர்போ, அல்லது மறைமுகத் தொடர்போ இருந்ததில்லை. அப்படி இருந்ததாகவும் இவர்கள் என் மீதுக் குற்றம் சுமத்தவில்லை.

இருந்தும் ஏன் இந்த "நரகல்" பட்டம்...??

ஏன் என்றால் பதிவு என்ற ஒன்றில் எழுதும் உரிமை இந்த "போலி போராளிகளுக்கு" மட்டுமே இருக்கின்றது. மற்றவர்கள் வாய் மூடி, கைக்கட்டி, இவர்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போட வேண்டும்.

இன்று இவன் போலி, நீ அல்லக்கை என்று யாரை சொல்லுகிறார்களோ....அவர்களை விட்டு நாம் விலக வேண்டும்.

நாளை வேறொருவரை அல்லக்கை என்பார்கள்..அவரையும் விட்டு விலக வேண்டும்..

ஏன் என்று கேள்விக் கேட்டால்...தொலைந்தீர்கள். இனையவம்பர்களின் ஒட்டுமொத்த கூட்டமும் உங்கள் மீது பாயும்...

இவர்களை அவதானித்தது வரை நான் கண்டது..நேற்றைய எதிரி, இன்றைய நண்பன்..இன்றைய எதிரி, நாளைய நண்பன், நேற்றைய நண்பன், இன்றைய எதிரி...என்று மாறிக்கொண்டேயிருக்கும்.

பதிவுலகில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் வரத்தயங்க போலிகள் மட்டுமே காரணமல்ல, இதுப் போன்ற வம்பர்களும் காரணமே.

இந்த வம்பர்கள் போக்கை மாற்றாத வரை 2015லிம் போலியின் அல்லக்கை என்று யாருடைய கால் சட்டையயைவது உருவிக்கொண்டேயிருப்பார்கள்.

போலியிடமிருந்து பதிவுலகத்தை இவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். !

இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள் என்பது தான் புரியவில்லை ! புதசெவி !


வாழ்க கருத்துரிமை ! வாழ்க தமிழ் பதிவுலகம் !

உரிமைத்துறப்பு :- இந்த பதிவில் வருவன அனைத்தும் நடந்த நிகழ்வுகளைக் கொண்டே எழுதப்பட்டது. இது உங்களை நேரடியாகவோ, உள்குத்தாகவோ தாக்கினால், அதற்கு முழுக்க முழுக்க நீங்களே பொறுப்பு.

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்