சமீபத்திய புதசெவி

ஜடாயு ஐயா கக்கும் விசவாயு

"உன் பணம் பணம் என் பணம் பணம் உன் பணம் என் பணம்"
அப்படின்னு பிரபு தேவா நடிச்ச ஒரு படத்திலே, பாட்டு ஒன்னு வரும். அதைப் போலவே,

"என் வெற்றி...என் வெற்றி..
உன் வெற்றி...என் வெற்றி...
என் தோல்வி..உன்
தோல்வி...
உன் தோல்வி...உன் தோல்வி.."
என்றுப் பாடுவது ஒரு குழுவின் வழக்கம். அந்தக் குழு யார் என்று நான் சொல்லித் தான் தெரியுனும்மா. வேற யார், பார்ப்னயீயத்தை ஆதரிக்கும், பார்பனர்கள்.

வழிப்பாடு உரிமைக் கேட்டால்,

"நீ கால்...நான் முகம்...என்ன செஞ்சாலும் உள்ளே விட மாட்டேன்" (நீ காற்று , நான் மரம் என்ற ராகத்தில் வாசிக்கவும்..), என்றுப் பாடுவார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவை என்றால், பொந்து மதம் (நன்றி : மீண்டும் லக்கிக்கு), இந்துக்கள் என்று ஒரு குழுவாக உருவகப்படுத்தி, மாய் மாலம் செய்வார்கள்.

இப்பக் கூட பாருங்க, நம்ம ஜடாயு ஐயா, மலேசியாவில் இந்துக்களின் வெற்றி என்றுக் கூப்பாடு போடுகிறார். இந்துராப் என்ற அமைப்பின் கீழ் ஒன்றினைந்து போராடியதாகவும், அதனால் மட்டுமே வெற்றி என்றும் கூவுகிறார். மலேசியாவில் நீங்க, பொந்து மதம் இல்லை, வேற எந்த மதமாக இருந்தாலும், கவனிக்கப்பட்டியிருக்க மாட்டீங்க. அவர்கள் முன்னிறுத்தியது மலாய் இனம். நீங்கள் தமிழர்/இந்தியர் என்றக் காரணத்திற்காகத் தான் புறக்கணிக்கப்பட்டார்கள்.

இதே, பொந்து மதத்தை வைத்தே தான் இம்முறை மக்களை திசை திருப்ப முயன்றார்கள், ம.இ.கவினர். எப்படித் தெரியும்மா, இந்துராப் என்பதை எதிர்க்க,"ஓம் சக்தி" என்ற முழக்கத்துடன், களமிறங்கி, வெளியீடுகள் வந்தன. (பார்க்க : காணொளி ). ஆனால், மக்களுக்கு மதம் சோறு போடும்மா.

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்"
என்பதை உண்ர்ந்த தமிழர்கள், தமிழர்கள் (இந்தியர்களில் 90% தமிழர்கள் தான்) விழிப்படைந்தார்கள். "மக்கள் சக்தி" என்று ஒன்றுக் கூடினார்கள். இம்முறை ஒவ்வொரு தமிழனும், மக்கள் சக்தி என்று முழங்கியதை, மலாய் இனத்தை ஆதரித்தக் கட்சிகள், சீனர்களுக்கான கட்சிகள் கூட, இந்த மக்கள் சக்தி முழக்கத்தை சுவரொட்டிகளில் தமிழிலே வெளியிட்டு, தமிழர்களிடையே ஆதரவைப் பெருக்கினார்கள்.

போராட்டம், சீனர்களையும், தமிழர்களையும் ஒதுக்கி, மலாய் இன மக்களை மட்டும் முன்னிறுத்திய அரசாங்கத்திற்கு எதிராக. தனியொருவராக தமிழ் இன மக்கள் இதை வென்று விடவில்லை.

டத்தோ சாமி வேலு, இந்தப் பிரச்சனைகள் வருவதற்கு முன், இந்தியாவில் ஒரு அதி முக்கியமான பார்வையாளராக வலம் வந்தவர். தமிழர்களுக்கெதிரான செயல்களுக்கு இன்னமும் துணைப் புரிகிறார் என்றுச் சொன்னவுடன், தமிழக முதல்வர் அவரை சந்திக்ககூட மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஜடாயு ஐயா, என்ன சொல்லுறார்..

"மலேசியாவில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மடல்:
இன்று காலைச் செய்தி,
டத்தொ சாமி வேலு, மலேசிய அரசின் ஒரே தமிழ் மந்திரி,
தேர்தலில் தோற்றுப் போனது தான்.
தன் சுகத்துக்காக, பதவிக்காக, தன் மக்களைக்
காட்டிக் கொடுக்கும் துரோகப் பரம்பரையை
அன்றைய ஜஸ்டீஸ் பார்ட்டியில்
பார்த்தோம். இன்றைய கழகங்கள், தமிழ் நாட்டு
கம்யூனிஸ்ட் வகையறாக்களிடம்
பார்த்தோம் பார்த்து வருகிறோம். இவர்களுக்கு அழிவு
காலம் வராது போலிருக்கிறது.
ஆனால், சாமி வேலு தோற்றதில் எனக்கு பரம சந்தோஷம்.
அவருக்கு தமிழ் நாட்டில்
மரியாதை தொடுத்தது அங்குள்ள உலகத் தமிழ் ஈனத்தலைவர் :)) "

இந்த சந்துல சிந்துப் பாடுறதுன்னு கேள்விப்பட்டியிருக்கோம். ஆனா இப்ப மறுபடியும் பார்க்கிறோம்.

இறுதியாக சாமி வேலுவின் தோல்விக்கு மகிழ்கிறார். இவரின் காழ்புணர்ச்சியயை/மகிழ்ச்சியயை மேலேக் கண்ட பிறகு, சாமி வேலுவின் தோல்விக்கு காரணம் ஒரு இந்துவாகத் தான் இருக்கும் என்று நீங்கள் எல்லாரும் நினைப்பீர்கள். அது தான் இல்லை.

சாமி வேலு தோற்றது, மைக்கேல் ஜெயக்குமார். பெயர் சொல்லுமே அவர் எந்த வித நம்பிக்கையாளர் என்று. அத்தோட விட்டுருவோமா, இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் சண்டை. என்று, மோதுகிற ஆடுகளின் ரத்ததைக் குடிக்கக் காத்திருந்து ஓநாய் போல, காத்துக் கிடத்த ஆர்.எஸ்.எஸ், முகத்தில் கரி, மறுபடியும் எப்படி பூசுனாங்க தெரியும்மா.

மைக்கேல் ஜெயக்குமார் நின்று போட்டியிட்டு வெற்றிப் பெற்றது, கெடிலான் எனப்படும் Parti Keadilan Rakyat. அதை தலைமை தாங்குபவர், அன்வர் இப்ராகின். ஒரு மலாய் இனத்துக்காரர். இசுலாமியர். இதில் ஒரு வேடிக்கை, அந்தக் கட்சியின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு, People's Justice Party . அந்தக் கட்சி முன்னிறுத்தும் முக்கியக் கொள்கை, அனைத்து மக்களையும் சமமாக பாவித்து, அரசு நடத்த வேண்டும் என்பதே.

ஆக, இந்த முறை தமிழர்கள் வென்றியிருக்கிறார்கள். மதம் தோற்றியிருக்கிறது.
தொடர்புடையச் சுட்டிகள் :-

39 Comments:

Anonymous said...

ஜடங்களுக்கு இந்து மதத்திலேயே
ஊறிப்போன ஈழத் தமிழர்களின் இனப்
படுகொலை கண்ணுக்குத் தெரியாதோ.

மலேசியாவில் நடப்பது மட்டும் உடனே
தெரியுதே.அங்கே கோவில்களிலே பூணூல் கும்பல் கொள்ளையடிக்கிறதோ?

Anonymous said...
This post has been removed by a blog administrator.
B.R.வசந்தன் said...

நீங்க சொல்றது முற்றிலும் சரி TBCD.
அவர் சமீபத்தில் சென்னை வந்திருந்தபோதும் நிருபர்கள் மத்தியில் உரையாடியதில் அவருடைய ஆணவத்தை மிகத் தெளிவாக காணமுடிந்தது. தன்னை சந்திக்க மறுத்த தமிழக முதல்வரை விமர்சித்ததும் சரியாக படவில்லை. மேலும் மலேசியா வாழ்
தமிழர்கள் மத்தியில் சாமிவேலுவைப் பற்றிய அதிருப்தியைக் காண முடிந்தது. அதனால்தான் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவரை தோற்கடித்தது ஒரு இந்தியர், தமிழர் அவ்வளவுதான். அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதில் எவருக்கும் அக்கறையில்லை.

மேலும் இந்தியர்கள் மலேசியாவின் எந்த நாடாளுமன்ற, மாநில மன்ற தொகுதிகளிலும் பெரூம்பான்மை இல்லாத நிலையில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றதற்கு பெரும்பான்மை மலாய் மற்றும் சீனர்களின் ஆதரவுடன்தான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

Anonymous said...
This post has been removed by a blog administrator.
அறிவன் /#11802717200764379909/ said...

நீங்களும் மலேசியத் தேர்தல் முடிவுகளில் மத ரீதியான விதயங்களை வலிந்து திணிக்க முயல்வதாகத்தானே தோன்றுகிறது?
ஜெயக்குமார் வெற்றி பெற்றது அவர் ஒரு கிருத்துவராக இருந்ததாலோ,அன்வர் இப்ராகிம்,அரசு அவர் மேல் இத்தனை அவச்சொல் புழுதி வாரித் தூற்றியும் இன்று விசுவரூபம் எடுத்தது அவர் முஸ்லீமாக இருந்ததாலோ அல்ல.
மேலும் உங்கள் வாதங்கள் சரியென்றால் இந்துராப் மனோகரன் ஜெயித்திருக்கிறாரே,அதற்கு மட்டும் என்ன காரணம் சொல்வீர்கள்? அவர் இந்தித்துவத்தை உயர்த்தியதாலா???????/
சொல்லப்போனால் மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

எல்லாவாதங்களிலும் உளுத்த கழகக் கொள்கையான மதரீதியான வெறுப்பை-அதுவும் இந்துமத ரீதியான வெறுப்பை - மட்டுமே திணிக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்????

தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.இதை எல்லா பார்வையாளர்களுமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்வரும்,மனோகரனும்,ஜெயக்குமாரும்,படாவியும் தங்கள் வெற்றி தோல்விக்கான காரணங்கள் முழுக்க இன,மத ரீதியான ஓரவஞ்சனைகளும்,மக்களின் எண்ணப் போக்கை முழுதும் ஒதுக்கியதும் என்பதை தெளிவாக அறிவார்கள்.

மத ரீதியான நம்பிக்கைகள்,அனுகூலங்கள் மனித வாழ்வுக்கு,சோத்னை நேரங்களில் ஒரு புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ள உதவும் உளவியல் காரணி,இந்த நுண்ணிய உண்மையை அறிந்ததால்தான் முன்னேறிய,முன்னெறிக் கொண்டிருக்கின்ற நாடுகள்,மத சுதந்திரங்களை மக்களுக்கு அளித்திருக்கும் அதே நேரத்தில் மதவெறி தலைதூக்காமல் பார்த்துக்கொள்கின்றன.

திராவிடக் கட்சிகளில் மதநிந்தனையும்,ஆர்.எஸ்.எஸ்/இச்லாமியக் குழுக்களின் மதவெறியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இதில் இந்து,பொந்து என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மத நிந்தனை செய்வதும் அடக்கம் !!!!!!!(ஆனால் மஞ்சள் துண்டு போட்டுக்கொள்ளலாம்,சாயிபாபாவின் காலில் விழலாம் !!!!)
இம்மாதிரியான காரியங்களுக்கான விலையைத்தான் படாவி இப்போது கொடுத்திருக்கிறார்.

TBCD said...

தவறான புரிதல். மதம் தாண்டிய ஆதிக்க சக்திகளுக்கெதிரான போராட்டம் என்பது தான் என் கருத்து.

///அறிவன் /#11802717200764379909/ said...
நீங்களும் மலேசியத் தேர்தல் முடிவுகளில் மத ரீதியான விதயங்களை வலிந்து திணிக்க முயல்வதாகத்தானே தோன்றுகிறது?///

அதைத் தான் சொல்லியிருக்கேன். இம்முறை அனைத்து மதத்தினரும் ஒன்றுக் கூடி போராடியதால் தான், இந்த அளவிற்கு அவர்களால் இடம் பிடிக்க முடிந்தது.

///
ஜெயக்குமார் வெற்றி பெற்றது அவர் ஒரு கிருத்துவராக இருந்ததாலோ,அன்வர் இப்ராகிம்,அரசு அவர் மேல் இத்தனை அவச்சொல் புழுதி வாரித் தூற்றியும் இன்று விசுவரூபம் எடுத்தது அவர் முஸ்லீமாக இருந்ததாலோ அல்ல.///

ஒரு முறை என் பழைய பதிவுகளைப் படியுங்கள். இந்துராப் என்பது ஒரு அமைப்பு. இப்போது, ம.க.இ.க தோழர்கள் தில்லையில் போராடினார்கள்.அவர்களுது கொள்கை மதவாதமா இல்லை. அதுப் போலவே இந்துராப் ஒரு உரிமைக்குப் போராடும் அமைப்பு.

///
மேலும் உங்கள் வாதங்கள் சரியென்றால் இந்துராப் மனோகரன் ஜெயித்திருக்கிறாரே,அதற்கு மட்டும் என்ன காரணம் சொல்வீர்கள்? அவர் இந்தித்துவத்தை உயர்த்தியதாலா???????/
சொல்லப்போனால் மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.
///

ஏன்னா, இந்து மதம் என்ற போர்வையின் கீழ், உளுத்துப் போன, சனாதான கருமம் இருக்கு. நாட்டார் தெய்வங்களையோ, அதை வழிபடுபவர்களையோ, நிந்திக்க வில்லையே ஏன். என்று யோசியுங்கள்.

பார்ப்பனீயத்திற்கு எதிரான குரலை, மத வழிப்பாட்டு உரிமைக்கு எதிரான குரலாகப் பார்க்க வேண்டாம்.


///
எல்லாவாதங்களிலும் உளுத்த கழகக் கொள்கையான மதரீதியான வெறுப்பை-அதுவும் இந்துமத ரீதியான வெறுப்பை - மட்டுமே திணிக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்????///

தேர்தல் முடிவுகளில் தமிழர்கள் பங்கு இன்றியமையாதது என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களின் கோரிக்கைகளில் தலையாயது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட் ஆநீதி. இந்துராப் கோரிக்கைகளை தயவு செய்துப் படித்துப் பாருங்கள்.

எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல் என்று அறிந்தே அவர்கள் இந்த தேர்தலில் இயங்கினார்கள்.

மதம் சோறு போடாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

///
தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.இதை எல்லா பார்வையாளர்களுமே ஒத்துக் ண்டிருக்கிறார்கள்.


அன்வரும்,மனோகரனும்,ஜெயக்குமாரும்,படாவியும் தங்கள் வெற்றி தோல்விக்கான காரணங்கள் முழுக்க இன,மத ரீதியான ஓரவஞ்சனைகளும்,மக்களின் எண்ணப் போக்கை முழுதும் ஒதுக்கியதும் என்பதை தெளிவாக அறிவார்கள்.///

உங்கள் சிந்தனையோட்டம் அருமை. பாதிக்கப்பட்டவனும், பாதிப்புக்கு காரணமானவனும் ஒன்று என்பது என்ன நியாயமோ தெரியவில்லை.

மத ரீதியான உரிமைகளுக்கு இங்கே யாரும் தடை செய்ய வில்லை. இந்து என்றப் போர்வையில், தமிழர்களை அடிமைகளாகவே வைத்திருக்க எண்ணும் சிலரை கேள்வி கேட்க, அங்தம் தேவைப்படுகிறது.

ஆறுமுகசாமிக்கு குரல் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ் இல்லை அன்பரே..

///
திராவிடக் கட்சிகளில் மதநிந்தனையும்,ஆர்.எஸ்.எஸ்/இச்லாமியக் குழுக்களின் மதவெறியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இதில் இந்து,பொந்து என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மத நிந்தனை செய்வதும் அடக்கம் !!!!!!!(ஆனால் மஞ்சள் துண்டு போட்டுக்கொள்ளலாம்,சாயிபாபாவின் காலில் விழலாம் !!!!)
இம்மாதிரியான காரியங்களுக்கான விலையைத்தான் படாவி இப்போது கொடுத்திருக்கிறார்.///

Anonymous said...
This post has been removed by a blog administrator.
ஜமாலன் said...

வசந்தன் அவர்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

நண்பர் அறிவன் கூறுவதுபோல.. இந்த பிரச்சனையை மதப்பிரச்சனையாக அதன் வெற்றியாக ஊடகங்கள் பெருக்கும்போது நண்பர் டிபிசீடி போன்றவர்கள் உண்மை நிலையை முன்வைப்பது அவசியம். அப்புறம் பதிவிற்கும் ஊடக்த்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

டத்தோவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே. அதை கொண்டாடிய விதம்தான் இங்கு பிரச்சனை. மனோகரன் வெற்றியை சொன்ன பத்திரிக்கைகள் ஜெயக்குமார் வெற்றிபற்றி சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இதில் உள்ள பல குழுபப்பங்களை இப்பதிவு தெளிவுபடுத்தியுள்ளது.
நன்றி.

கோவி.கண்ணன் said...

இங்கே எதும் வம்பு தும்பு நடக்கிறதா ?

அச்சச்சோ நான் வரலை....

வர்ட்டா ?

பை !

:))

Anonymous said...
This post has been removed by a blog administrator.
TBCD said...

விக ஐயா, கொஞ்சம் மட்டுறுத்தி வெளியிடுகிறேன்...

விடாது கருப்பு has left a new comment on your post "ஜடாயு ஐயா கக்கும் விசவாயு":

இந்து மட்டும் ஓட்டு போட்டுதான் தமிழங்க ஜெயித்த மாதிரி கதை கட்டுவது ஜடவாயு, நம்பரை ****** பின்னால் கட்டிக்கொண்டு திரியும் மட சாம்பிராணி மற்றும் செத்துபோன பார்ப்பனீயத்தை இன்னமும் தூக்கிப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இழிபிறவிப் பார்ப்பனர்களின் வேலை.

மலேசியாவில் தமிழர்கள்(இந்துக்கள்), கிறிஸ்தவர்கள் என அனைவருமே போட்டார்கள். தமிழ் முஸ்லிம்கள் யாருக்குப் போட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் ஒரு இந்திய அமைச்சர் என்பவர் இந்திய இஸ்லாம் சமூகத்தையும் உள்ளடக்கிய பிரதிநிதிதான்.

இந்த வெற்றியினை ஒட்டுமொத்த தமிழரின் வெற்றியாகத்தான் கருத முடியுமே தவிர இந்துக்களின் வெற்றி என்று கருத முடியாது.

மதம் மனிதனை நல்வழிப்படுத்தத்தான் கண்டு பிடிக்கப்பட்டதே தவிர இந்த பார்ப்பர சொறி நாய்கள் ****** பின்னால் சொறிந்து கொள்வதற்காக அல்ல.

அரேபியாவில் ஷேக்கு குசு விட்டால் கூட முஸ்லிம் பாம் போட்டு விட்டான் என்று குதிப்பது பாப்பான் இன்று நேற்று மட்டுமல்ல, காலம் காலமாக செய்தே வந்திருக்கிறான்.

மக்களுக்கு சேவை செய்யப்போன சாமிவேலு அதனை மறந்ததாலேயே மண்ணைக் கவ்வ நேர்ந்தது. அவரின் சம்மந்தியும் முன்னாள் பிரதமருமான மகாதீரும் நன்கு காட்டமாக கேட்டார் நாக்கை பிடுங்கும் படியாக!

மலேசிய சாமிவேலுவை கருணாநிதியும் தான் எதிர்த்து இருக்கிறார். அதனை இந்த பார்ப்புகள் மறந்து விட்டனர்.

TBCD said...

ஏன் நிறைய பின்னுட்டங்கள் நீக்கப்பட்டியிருக்கு என்று நினைப்பவர்களுக்கு .

பார்ப்பனீயத்தை கண்டித்து எழுதினால், இத்தனை பின்னுட்டம் ஆபாசமாக வருது என்று நீங்கள் அறிந்துக் கொள்ளவே. இதை யார் போடுறாங்க என்று உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன்.

அறிவன் /#11802717200764379909/ said...

/////நண்பர் அறிவன் கூறுவதுபோல.. இந்த பிரச்சனையை மதப்பிரச்சனையாக அதன் வெற்றியாக ஊடகங்கள் பெருக்கும்போது///////

ஜமாலன்,நான் இப்பிரச்னையை மத ரீதியானதாகப் பார்ப்பதாகப் பொருள் கொண்டிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.(நீங்கள் எழுதியதற்கு அவ்வாறும் பொருள் வருகிறது :-))

மற்றபடி கருத்தியல் நோக்கம் இல்லாது,ஆபாச அர்ச்சனைகள் செய்யும் நிறமிலி அஃறினைகள் பலர் இருப்பதையும் அறியமுடிகிறது.

சில இடங்களில் கருத்தாகக் கூட பேசக்கூடாத அனுபவக் கல்வியும் அறியக் கிடைக்கிறேன்.

ஜமாலன் said...

நண்பர் அறிவனுக்கு...

பிரச்சனைகைளை மதப்பிரச்சனையாக மாற்றக்கூகூடாது என்பதில் உங்களத கருத்துடன் எனக்கு உடன்பாடே.

//மற்றபடி கருத்தியல் நோக்கம் இல்லாது,ஆபாச அர்ச்சனைகள் செய்யும் நிறமிலி அஃறினைகள் பலர் இருப்பதையும் அறியமுடிகிறது.//

இது எனக்கும்கூட கிடைக்கும் அர்ச்சனைகள்தான். நாம் ஒரு ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்துவதே பதிவுலகில் சிறந்த விஷயம். சிலவேளை அப்படி சில கிடைப்பதையுயும் நமது எதிரிகளின் பங்களிப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

//சில இடங்களில் கருத்தாகக் கூட பேசக்கூடாத அனுபவக் கல்வியும் அறியக் கிடைக்கிறேன்.//

எல்லாவற்றையும் புறநிலையில் அனுக முயன்றால் பிரச்சனை வராது என்றே நினைக்கிறேன்.

TBCD said...

தெரியலை..அதுக்கு பதிலை மணியாட்டுறவங்க யாராச்சும் வந்துச் சொன்னா நல்லா இருக்கும் :))

/// Anonymous said...

ஜடங்களுக்கு இந்து மதத்திலேயே
ஊறிப்போன ஈழத் தமிழர்களின் இனப்
படுகொலை கண்ணுக்குத் தெரியாதோ.

மலேசியாவில் நடப்பது மட்டும் உடனே
தெரியுதே.அங்கே கோவில்களிலே பூணூல் கும்பல் கொள்ளையடிக்கிறதோ?
///

TBCD said...

உங்கள் பார்வை மகழ்ச்சியயை அளிக்கிறது..வசந்தன் நன்றி..

///
B.R.வசந்தன் said...

நீங்க சொல்றது முற்றிலும் சரி TBCD.
அவர் சமீபத்தில் சென்னை வந்திருந்தபோதும் நிருபர்கள் மத்தியில் உரையாடியதில் அவருடைய ஆணவத்தை மிகத் தெளிவாக காணமுடிந்தது. தன்னை சந்திக்க மறுத்த தமிழக முதல்வரை விமர்சித்ததும் சரியாக படவில்லை. மேலும் மலேசியா வாழ்
தமிழர்கள் மத்தியில் சாமிவேலுவைப் பற்றிய அதிருப்தியைக் காண முடிந்தது. அதனால்தான் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவரை தோற்கடித்தது ஒரு இந்தியர், தமிழர் அவ்வளவுதான். அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதில் எவருக்கும் அக்கறையில்லை.

மேலும் இந்தியர்கள் மலேசியாவின் எந்த நாடாளுமன்ற, மாநில மன்ற தொகுதிகளிலும் பெரூம்பான்மை இல்லாத நிலையில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றதற்கு பெரும்பான்மை மலாய் மற்றும் சீனர்களின் ஆதரவுடன்தான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
///

TBCD said...

சரியான கேள்விகள்...

//ஜமாலன் said...

மனோகரன் வெற்றியை சொன்ன பத்திரிக்கைகள் ஜெயக்குமார் வெற்றிபற்றி சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.//

அதற்கு மகிழ்கிறேன்...நன்றி..ஜமாலன் ஐயா.

//
இதில் உள்ள பல குழுபப்பங்களை இப்பதிவு தெளிவுபடுத்தியுள்ளது.
நன்றி.
//

TBCD said...

மூத்தப் பதிவர் மாதிரி பொறுப்பா நடக்க வேண்டாமா..

தப்பிக்கிறதிலேயே இருக்கீங்களே..

//
கோவி.கண்ணன் said...

இங்கே எதும் வம்பு தும்பு நடக்கிறதா ?

அச்சச்சோ நான் வரலை....

வர்ட்டா ?

பை !

:))
//

TBCD said...

அப்படிச் சொல்லிட்டா எப்படி..

தொல்லையே வேண்டாம் என்று..மறு அறிவிப்பு வரும் வரை அனானி பின்னுட்டங்கள் நீக்கப்படுகிறது...

:)))

//
அறிவன் /#11802717200764379909/ said...

சில இடங்களில் கருத்தாகக் கூட பேசக்கூடாத அனுபவக் கல்வியும் அறியக் கிடைக்கிறேன்.
//

SanJai said...

அட போங்ணா.. ஒரே கொய்ப்பமா கீது :(

ஜோ / Joe said...

TBCD,
நீங்களே சறுக்குகிறீர்கள்
//தமிழர்கள்(இந்துக்கள்), கிறிஸ்தவர்கள் //

தமிழர்கள்(இந்துக்கள், கிறிஸ்தவர்கள்) - என்றிருக்க வேண்டாமோ?

TBCD said...

ஐயா,

அது விடாது கருப்பு என்ற அதர் ஆப்ஷனில் வந்த ஒரு பின்னுட்டம்.

ஆபாசமான வார்த்தைகளை மட்டும் நீக்கி என் பெயரில் போட்டு இருக்கேன்.

அது என் கருத்து இல்லை.

நீங்கள் சொல்வதில் உடன்படுகிறேன்..


///ஜோ / Joe said...

TBCD,
நீங்களே சறுக்குகிறீர்கள்
//தமிழர்கள்(இந்துக்கள்), கிறிஸ்தவர்கள் //

தமிழர்கள்(இந்துக்கள், கிறிஸ்தவர்கள்) - என்றிருக்க வேண்டாமோ?
///

Dharan said...

உண்மையில் HINDRAF அமைப்பின் நோக்கம் என்ன?

"இந்து" என்ற வார்த்தையை அதில் பார்த்த போதே அதன் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் வலுப்பட்டுவிட்டது.
யாராவது MALAYSIA வில் வசிப்பவர்கள் விரிவாக எழுதினால் ...அடஏன் நீங்களே எழுதக்கூடாது????

TBCD said...

தரன்,

இந்தப் பதிவு தொடர்பான அனைத்துச் சுட்டிகளையும் படித்தால் ஓரளவிற்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.

இருந்தாலும் ஒரு சின்ன விளக்கம்.

மனித உரிமை மீறல்கள் மலேசியாவில் இந்தியர்களுக்கெதிராக நடந்ததை உலகம் அறியச் செய்ய, அங்கிருக்கும், இந்திய வம்சாவழியினர் கண்டெடுத்த அமைப்பு தான் இந்துராப்.

அதில் உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களா, என்றால் அந்தக் கேள்விக்கு விடை என்னிடம் இல்லை.

ஆனால், அவர்கள் செயல்பாடுகள், மலேசிய இந்தியர்களின் மனவேதனையயை பிரதிபலிக்கிறது.

இந்து முன்னனி, என்றுச் சொன்னால்லே அலர்டாக நாம் ஆகும் வண்ணம், காவியுடை கூட்டம் ஆக்கியிருப்பதை இப்போது அனைவரும் உணர்வோம்.

அங்கே மதம் பிரதானப்படுத்தவில்லை. உரிமைகள் தான் பிரதானப்படுத்தப்படுகிறது.

இந்து என்னும் சொல், அவர்களுக்கு இன்னும் "taboo"வாக ஆக்கப்படவில்லை.

அரசியல் இயக்கமாகவும் அது வளரவில்லை. இம்முறை தமிழர்கள் வெற்றி பெற்றது எல்லாமே, அனைத்து இன, மத சமமாக நடத்த வேண்டும் என்று விரும்பும் எதிர் கட்சிகளுடன் இனைந்து தான்.

போதும் விளக்கம் என்று நினைக்கிறேன்.

///
Dharan said...

உண்மையில் HINDRAF அமைப்பின் நோக்கம் என்ன?

"இந்து" என்ற வார்த்தையை அதில் பார்த்த போதே அதன் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் வலுப்பட்டுவிட்டது.
யாராவது MALAYSIA வில் வசிப்பவர்கள் விரிவாக எழுதினால் ...அடஏன் நீங்களே எழுதக்கூடாது????

///

வாக்காளன் said...

ஜடாயு விச வாயு கக்கலான மட்டுமே அதிசயம். எப்பவும் விசவாயும் கக்கும் விச ஜந்து ஜடாயு

Balachandar said...
This post has been removed by a blog administrator.
உடன்பிறப்பு said...

//ஆக, இந்த முறை தமிழர்கள் வென்றியிருக்கிறார்கள். மதம் தோற்றியிருக்கிறது//

கூரிய வார்த்தைகள். மதப் பேய்களை வீழ்த்தும் வார்த்தைகள்

முகவை மைந்தன் said...

தெம்பூட்டும் வகையில் ஒரு விவாதம். வாதங்களை தெளிவாக, பொதுவான கோணத்தில் வைத்து விவாதிக்க மேடை போட்டுத் தந்த டிபிசிடிக்கு கை தூக்கலாம்.

TBCD said...

அப்படியா..?

தகவலுக்கு நன்றி வாக்காளன்.

///
வாக்காளன் said...
ஜடாயு விச வாயு கக்கலான மட்டுமே அதிசயம். எப்பவும் விசவாயும் கக்கும் விச ஜந்து ஜடாயு
///

TBCD said...

உறுதி செய்தமைக்கு நன்றி உடன்பிறப்பே.. :))


///
உடன்பிறப்பு said...
//ஆக, இந்த முறை தமிழர்கள் வென்றியிருக்கிறார்கள். மதம் தோற்றியிருக்கிறது//

கூரிய வார்த்தைகள். மதப் பேய்களை வீழ்த்தும் வார்த்தைகள்
///

TBCD said...

கை தட்டுவாங்க..சரி..

கை தூக்குவது எதுக்கு அடிக்கவா.. :P

நன்றி முகவை மைந்தரே..!!

//
முகவை மைந்தன் said...
தெம்பூட்டும் வகையில் ஒரு விவாதம். வாதங்களை தெளிவாக, பொதுவான கோணத்தில் வைத்து விவாதிக்க மேடை போட்டுத் தந்த டிபிசிடிக்கு கை தூக்கலாம்.
//

Balachandar said...
This post has been removed by a blog administrator.
tbr.joseph said...

நான் சமீபத்தில் மலேசியா சென்றிருந்தபோது உறவினர்களுடன் உரையாடியபோதும் மலேசிய தமிழ் பத்திரிகைகளை படித்ததிலிருந்தும் நான் அறிந்துக்கொண்டது டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களின் மீது மலேசிய வாழ் தமிழர்கள் மத்தியிலிருந்த வெறுப்பு எந்த அளவு ஆழமானது என்பதைத்தான்.

அவரை மலேசிய மற்றும் சீனர்களின் ஆதரவுடன் தமிழர் ஒருவர் தோற்கடித்தது அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய கட்சிக்கும் சரியான பாடம் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. மலேசிய வாழ் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத உணர்வு இருப்பதை என்னால் காண முடியவில்லை. கிறிஸ்துவர்களானாலும் இந்துக்களானாலும் இன்றைய தலைமுறையினர் கோவிலுக்கு செல்லும் பழக்கமே இருப்பதாக தோன்றவில்லை. ஆகவே நாமாக இதை கற்பித்துக்கொள்கிறோமே தவிர அங்கு மதம் அத்தனை முக்கியமாக இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. சாமிவேலு எத்தனை ஊழல் பேர்வழியானாலும் அவருக்கு ஒரு முக்கிய பதவி அமைச்சரவையில் கொடுக்கப்பட்டிருந்தது. மலேசிய இந்திய காங்கிரசில் ஆக மூவர் மட்டுமே இன்று பார்லியில் உள்ளனர். அதில் எவருக்கேனும் அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது தெரியவில்லை. அப்படியே கிடைத்தாலும் சாமிவேலுவுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் இவர்களுக்கு கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

TBCD said...

மாறுபடுகிறேன்..தைப்பூசத்திலும் வார ஒரு முறை கோவிலுக்குப் போவதிலும் அவர்கள் காட்டும் ஈடுபாடு தமிழக இளைஞர்களை விட மிகுதியாகவே இருக்கிறது.

ஆனால், மற்ற மதத்தினரை நோக்கிய துவேஷப் பார்வை இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

///
மலேசிய வாழ் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத உணர்வு இருப்பதை என்னால் காண முடியவில்லை. கிறிஸ்துவர்களானாலும் இந்துக்களானாலும் இன்றைய தலைமுறையினர் கோவிலுக்கு செல்லும் பழக்கமே இருப்பதாக தோன்றவில்லை.///

சாமிவேலு..ஒரு பலி கடா என்பது என் தனிப்பட்ட கருத்து. தமிழர்களின் நிலைக்கு, தனியொருவராக அவரைன் மட்டும் சொல்ல முடியாது. சாமிவேலுவின் அமைச்சரவை செயல்பாடுகளுக்கு வேண்டாமானால் சாமிவேலு பொறுப்பேற்க முடியும். குரல் கொடுத்திருந்தால், சாமி வேலு அழிக்கப்பட்டியிருப்பர்.

அரசாண்டவர்கள் தான் பொறுப்பு. ஊழல் சாமிவேலு மட்டுமெ செய்ததாக நான் எண்ணவில்லை.

இம்முறை அதிகமான தமிழர்கள் மாநிலங்களவையில் தேர்வாகியிருக்கிறார்கள். பினாங்க் துனை முதல் அமைச்சராக ஒரு தமிழரை ஆக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

பரிசான நேஷ்னல், இந்திய பிரதிநிதிதத்துவத்தில் கை வைத்தால், அடுத்த முறையும், வாக்கு கிடைக்காது என்று அவர்கள் நினைக்ககூடும். அதனால், அமைச்சராக ஒருவரேனும் ஆக்கப்படுவார்.பொறுத்திருந்துப் பார்ப்போம்.

///
ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. சாமிவேலு எத்தனை ஊழல் பேர்வழியானாலும் அவருக்கு ஒரு முக்கிய பதவி அமைச்சரவையில் கொடுக்கப்பட்டிருந்தது. மலேசிய இந்திய காங்கிரசில் ஆக மூவர் மட்டுமே இன்று பார்லியில் உள்ளனர். அதில் எவருக்கேனும் அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது தெரியவில்லை. அப்படியே கிடைத்தாலும் சாமிவேலுவுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் இவர்களுக்கு கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
///

Balachandar said...
This post has been removed by a blog administrator.
Balachandar said...
This post has been removed by a blog administrator.
TBCD said...

பாலசந்தர் என்ற மும்பாய் அனானி,

உன் பின்னுட்டங்களுக்கு நன்றி..

பதிவை முகப்பில் வரவைக்க பின்னுட்ட கயமைத்தனம் பண்ண அவசியம் இல்லாமல், நீ வந்து பின்னுட்டம் இடுகிறாய்..

ரொம்ப நன்றி.. சேவைக்கு நன்றி..தொடர்து செய்யவும்..

பின்னுட்டம் வெளியிட்டு நீக்கப்படும்.

பாலா, இப்போ அடுத்து Balachander

நல்ல சேருறீங்கய்யா...வந்து இங்கே..

///
Balachander said..

This post has been removed by the blog administrator.
///

Anonymous said...
This post has been removed by a blog administrator.
Robin said...

அருமையான பதிவு. எந்த மதமாக இருந்தாலும் தமிழர் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்