சமீபத்திய புதசெவி

என்னாத்தைச் சொல்ல 27-4-2009

செயலலிதாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது !!

திடிரென்று பதிவுலகில் பெருக்கெடுத்து ஓடும் செயலலிதா ஆதரவிற்கும் பா.ம.க அந்த கூட்டனிக்கு போனதற்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்றே என் மனம் விரும்புகிறது.

தமிழர்களின் 150 வருட கணவை சிதைப்பேன் என்று தேர்தல் வாக்குறுதிகளில் யாரும் கேட்காமலே (அல்லது சோ கேட்டதற்காக) சேர்த்து அழுத்தம் திருத்தமாக அதை சொல்லியும் வருகின்ற செயலலிதாவிற்கு ஆதரவா...???

இந்த தேர்தல் கிட்டத்தட்ட இழுபறி தேர்தல் தான். அப்படியே பா.ச.க வந்தாலும், சட்டென்று தமிழகத்தில் ஆட்சியயை கலைத்துவிட முடியாது. அப்படி கலைக்கும் நிலை வந்தால், ஈழத் தமிழர்களின் நிலையயை எண்ணி, கலைஞரே கலைத்துவிடுவார்.

அப்படி கலைக்காத பட்சத்தில் இன்னும் 2 வருடங்களாவது தமிழகத்தில் ஆட்சி மாற்றமோ, தேர்தலோ இல்லை. எனவே, இன்று செயலலிதா அளிக்கும் ஈழத்தீர்வு வாக்குறுதி காற்றில் பறப்பது உறுதி. அதுவரை ஈழக்கணவுடன் அங்கே யாரும் மிஞ்சி இருக்க மாட்டார்கள். :(

இதை கணக்கிட்டே செயலலிதாவும் ஆதரவை நல்கியிருப்பார் என்று நான் திடமாக நம்புகிறேன்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு !

எத்தனை முறை பட்டாலும் நான் திரும்ப திரும்ப செயலலிதாவை நம்புவேன் என்று சொல்லுபவர்களை நாம் அதி புத்திசாலிகள் என்று தான் சொல்ல முடியும்.

கண்டிப்பாக திமுக கூட்டனிக்கு வாக்களிக்க கூடாது. அதே சமயம், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நன்றிவிசுவாசமற்ற செயலலிதாவிற்கும் வாக்களிக்க முடியாது.

இரு தலைக்கொள்ளி எறும்பு போல மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதாக இருக்கின்றது.

யாருக்கு வாக்களிக்கலாம் என்று நீங்களாவது சொல்லுங்க...அதற்கான காரணத்துடன் !

யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை விட இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்கூடாது என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது !

ஃஃஃஃஃஃஃஃஃ

இந்த பொருளாதார தேக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் பலரை அரித்து, அழித்து வருகிறது. பலர் இந்த தேக்கத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இந்த நிலை அமெரிக்க பொருளாதாரத்தை நம்பியுள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனத்திலும் பரவிக்கிடக்கின்றது.

எனது உறவினர் ஒருவர் கணிணித்துறையில் சென்னையில் கடந்த இரண்டு மாதம் முன்பு வரை, பணி புரிந்தார். திடிரென்று அவருடைய நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. இதுப் போன்ற எண்ணற்ற சிறு நிறுவனங்கள் வெளியே எந்தவித ஆரவாரமுமின்று மூடப்பட்டதாகவே தெரிகின்றது. வேலையிழந்த அந்த மனிதர் ஒரு குடும்பத்தலைவன். சிறு குழந்தைக்கு தகப்பனும் கூட.

வேலையிழந்த அவர், மனம் தளரவில்லை. அழுது புலம்பவில்லை. புலம்பினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அறிந்திருந்தாரோ என்னவோ. தனது பழைய நண்பர் ஒருவரை தேடிப் பிடித்தார். சென்னைக்கு அழைத்து வந்தார், மக்கள் வந்துப் போகும் ஒரு இடத்தில் ஒரு கடையயைப் பிடித்தார், ஒரே வாரத்தில் பிரியாணிக்கடைப் போட்டு விட்டார்.

கடை ஆரம்பித்து இரண்டு மாத காலம் ஆகிவிட்டது. போட்ட காசுக்கு பழுதில்லாமல் பணம் வருகின்றதாம். இன்னும் கொஞ்ச காலத்தில் பணம் பார்க்கலாம் என்று நம்பிக்கையாக இருக்கின்றார். நான் ஐடி படித்துள்ளேன். என்னால், இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது என்று இல்லாமல், உடனடியாக செயலில் இறங்கிய அவரை பார்த்தால் வேலையிழந்தால் எல்லாமே போச்சு என்று எண்ணமே தோன்றாது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தமிழ்மணம் விண்மீன் வாரம் இன்றுடன் முடிகின்றது.

தொடர்ந்து பின்னுட்டம் மூலம் ஆதரவளித்த பதிவர்களுக்கு (வாசகர்கள் என்று எல்லாம் சொல்ல நா கூசுதுங்கண்ணா) நன்றி ! நன்றி ! நன்றி !

6 Comments:

தமிழ்நெஞ்சம் said...

என்ன அதுக்குள்ளே ஒரு வாரம் முடிந்து விட்டதே..

தமிழ்நெஞ்சம் said...

என்னங்க தப்பிச்சுட்டீங்களே @#$@$@#$

TBCD said...

யாரு விண்மீன் ஆனாலும் ஒரு வாரத்திற்கு ஏழே நாள் தானாம்..

அநியாயமாக இல்லை..??
//
தமிழ்நெஞ்சம் said...

என்ன அதுக்குள்ளே ஒரு வாரம் முடிந்து விட்டதே..
//

ஜெகதீசன் said...

:)

ஜெகதீசன் said...

காங்கிரஸ்க்கு ஓட்டுப் போடக்கூடாது...
ஆனா யாருக்குப் போடுறதுன்னு தான் தெரியலை...
:P

மங்களூர் சிவா said...

/
உடனடியாக செயலில் இறங்கிய அவரை பார்த்தால் வேலையிழந்தால் எல்லாமே போச்சு என்று எண்ணமே தோன்றாது.
/

அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்