சமீபத்திய புதசெவி

என்னாத்தைச் சொல்ல 9-4-09

மதிமுகவின் அழுத்தம் தாங்க முடியாமல், செயலலிதா அம்மையார், கதறிக்கொண்டு, வைகோ கையில் காலில் விழுந்து நாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅலு இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கியுள்ளார்.

வைகோவிற்கு, அதிமுகவை விட்டால், பல் வேறு வழிகள் இருந்தப் பொழுதும், தன்னுடைய உயரிய கொள்கைப் பிடிப்பால், அந்த நாண்கு இடங்களை ஒத்துக்கொண்டுள்ளார்.

வைகோவின் கொள்கைப் என்னவென்று கேட்கும் நச்சு பூச்சிகளே." எனக்கு இரண்டு கண்கள் போனாலும், கலைஞருக்கு ஒரு கண்ணாவது போகட்டும்" என்பதே என்பதை உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.

அந்த நாண்கு இடங்கள் எவை எவை என்று மீண்டும், செயலலிதா அம்மையார், வைகோவின் கையில் காலில் விழுந்து சமாதானம் செய்தப் பின்னே நமக்குத் தெரிய வரும்.

இதெல்லாம் ஒரு பிழைப்பு......!!!!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பிரபாகரன் மீது துரும்பு விழுந்தாலும், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என்று வைகோ பேசியிருக்கிறார்.

ஒத்துக்கிறோம்.......நீங்க ஈழ ஆதரவாளர் தான் !

மற்ற எந்த அரசியல்வியாதியயை விடவும் தொடர்ச்சியாக ஈழ ஆதரவு தெரிவித்து வந்துள்ளீர்கள் (அதாவது செயலலிதாவின் கண்பார்வைக்கு வெளியே)

ஏன் இந்த இரத்த ஆறு ஓடுவதற்கு இது வரை பிரிந்த உயிர்கள் போதவில்லையா !

எங்கே சூராதி சூரர், சுப்பிரமணிக்கு சொந்தக்காரர், செயலலிதாவை களத்தில் இறக்கி இப்போதே தமிழகத்தை அதிர வைக்க வேண்டியது தானே.

போகாத ஊருக்கு வழி தேடும் வைகோ ஐயா, பிரபாகரன் உயிர் என்றால் வெல்லக்கட்டி, மற்ற ஈழத்தவர்கள் என்றால் மட்டும் தூசா..??

நாளையே பிரபாகரன் இல்லையென்று போனால், ஈழத்தமிழர்களை அம்போ என்று விட்டுவிடுவீர்களா என்ன..???

உங்கள் ஆதரவு தனி நபர் துதி என்றளவில் இல்லாமல் மக்களின் உயிர் பிரச்சனையயை முன்னிறுத்தட்டுமே.

இறுதியாக,

சிறைச்சாலை வா வாங்குது, வாக்குசாவடி போ போ என்று சொல்லுதா...??

9 Comments:

தமிழ் பிரியன் said...

///உங்கள் ஆதரவு தனி நபர் துதி என்றளவில் இல்லாமல் மக்களின் உயிர் பிரச்சனையயை முன்னிறுத்தட்டுமே. ///
வழி மொழிகிறேன்.

Renga said...

பிரபாகரன்தான் பணம் கொடுப்பார், மற்ற ஈழதமிழர்கள் கொடுப்பார்களா?

TBCD said...

ஆதாரம் இருக்குதுங்களா ரங்கா !!

மேலாதிக தகவல்களுடன் நீங்கள் இதனைச் சொன்னால்,நம்ப சாத்தியக்கூறுகள் உண்டு !!
///
Blogger Renga said...

பிரபாகரன்தான் பணம் கொடுப்பார், மற்ற ஈழதமிழர்கள் கொடுப்பார்களா?
///

suttapalam said...

நல்ல பதிவு..வைகோ முழித்தால் தேவலை.. அரசியலில் ஜொலிக்க வேண்டியவர் இப்படி காமெடியன் ஆகிறார்!!

TBCD said...

நன்றி தமிழ் !
///
தமிழ் பிரியன் said...

///உங்கள் ஆதரவு தனி நபர் துதி என்றளவில் இல்லாமல் மக்களின் உயிர் பிரச்சனையயை முன்னிறுத்தட்டுமே. ///
வழி மொழிகிறேன்.
///

TBCD said...

தூங்கிறவர்களை எழுப்பலாம்..!!

வருகைக்கு நன்றி சுட்டப்பழம்

//
suttapalam said...

நல்ல பதிவு..வைகோ முழித்தால் தேவலை.. அரசியலில் ஜொலிக்க வேண்டியவர் இப்படி காமெடியன் ஆகிறார்!!
//

டக்ளஸ்....... said...

\\போகாத ஊருக்கு வழி தேடும் வைகோ ஐயா, பிரபாகரன் உயிர் என்றால் வெல்லக்கட்டி, மற்ற ஈழத்தவர்கள் என்றால் மட்டும் தூசா..??

நாளையே பிரபாகரன் இல்லையென்று போனால், ஈழத்தமிழர்களை அம்போ என்று விட்டுவிடுவீர்களா என்ன..???

உங்கள் ஆதரவு தனி நபர் துதி என்றளவில் இல்லாமல் மக்களின் உயிர் பிரச்சனையயை முன்னிறுத்தட்டுமே. \\


நச்... நச்..

நான் தகுதியானவனா? said...

//உங்கள் ஆதரவு தனி நபர் துதி என்றளவில் இல்லாமல் மக்களின் உயிர் பிரச்சனையயை முன்னிறுத்தட்டுமே.//

பிரபாகரனைப் பற்றி பேசினால் மட்டும் தான், அரசியலில் தன் பெயர் நிலைத்து இருக்கும் என்று நினைத்து இருப்பார்போல,
மற்ற ஈழத்தமிழர்களைப் பற்றி பேசினாலும் தன் பெயர் அரசியலில் நிலைத்து இருக்கும் என்று யாராவது அவருக்குச் சொல்லி இருக்கலாம்
சொல்லியிருந்த்தால்

Anonymous said...

ORU MAASATHUKKU MUNNAADI ITHU SERIOUS AANA KATTURAI....IPPA SIRIPPAA IRUKKU........
PORULE MAARIPPOCHUPPAA.........HA.HA.
JAYAVUKKU BHAYANDHU VAIKO PESAVILLAIYAAM....EEZHAPPRACHNAIYAI!
HA..HA...IPPO AMMAVE ADIKKIRAANKALEPPA...THANI EEZHAMNU...
ITHU EPPADI IRUKKU!..?(1 MAY 2009)

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்