கலைஞருக்கு தொண்டர்கள் மீது அக்கறையில்லை போலிருக்கின்றது.
பல பாடுப்பட்டு, அவர் என்ன செய்தாலும் அதற்கு ஒரு நியாயம் சொல்லி, எதிர் நியாயம் சொல்லி, ஓய்ந்துப்போய்விட்டார்கள் உடன்பிறப்புகள்.
இந்த நிலையில் மீண்டும், கலைஞர் ஈழவிவகாரத்தில் விவகாரமான அறிவுரையயை கூறியிருக்கிறார்.
வேண்டாம் வலிக்கும் ! அழுதுடுவாங்க ! விட்டுருங்க ஐயா !
அவர் சொன்னதின் சாரத்தை நாம் எடுத்து, இப்படியும் சொல்லலாமோ !
கெட்டுப் போன பெண்ணின் வாழ்க்கை தான் முக்கியம் கெடுத்தவனுக்கே கட்டி வைப்பது தான் நியாயம். கெடுத்தவனை கைது செய்யனும் என்று சொல்பவர்கள், தங்கள் மனசாட்சியயை கழட்டி வைத்துவிட்டு தான் பேச வேண்டும். இனிமேல் கெடுக்கப்பட்ட பெண்ணுக்கு வேற வழியில்லை, எனவே சேர்ந்து வாழ்வது தான் ஒரே வழி !
அவ்வ்வ்வ்வ்
இப்ப எல்லாம், மைனர் குஞ்சுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை போன்ற தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புறாங்க ஐயா !
செய்த தவற்றிற்கு தண்டனையில்லாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு அரசியல்வியாதிகளே சரியான எடுத்துக்காட்டு.
ஒரு முறை தவறு செய்தவனுக்கு அடுத்த முறை தவறு செய்வதென்பது மிகவும் சுலபமான ஒன்று. அதுவும் அதிகாரம் மிகுந்த பதவிகளில் இருப்பவர்களுக்கு அது மிகவும் சுலபமான ஒன்று.
ராசபக்சே தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டாலும், சரியான அதிகாரப்பகிர்வு கொடுத்தாலும், இழக்கப்பட்ட, கொல்லப்பட்ட உயிர்களுக்காக அவர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.
அதை நிறைவேற்ற இறையாண்மை தேவையில்லை !
ஆண்மை தான் தேவை...உலக நாடுகளுக்கு !
வயக்ரா போட்டுக்கொண்டதுப் போல், அவ்வப்போது உலக நாடுகளின் ஆண்மை அவர்களுக்குத் தேவையான போது மட்டும் விழித்துக்கொள்வதால், தவறுகள் எல்லாம், தவறில்லாமல் போய் விடாது.
இரத்தம் தோய்ந்த பற்களுடன் சரித்திரத்தில் சாவா இடம் பெற்ற இராசபக்சே, அவருக்கு கிடைக்கப் போகும் காலம் கடந்த நீதிக்கும் சாவா இடம் பெற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வழக்கமாக பெங்களூர் சிவாசி நகரில் நடக்கின்ற நிகழ்வு-" ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர்/மத்தினரின் கோவிலுக்குள் அவர்கள் வெறுக்கின்ற ஒரு மிருகத்தினை வெட்டி உள்ளே வீசி கலவரத்தை உண்டுக்குவது"
பல முறை வெற்றிகரமாக(???!!!) இது மதக்கலவரத்தையும், கலவரத்தையும், சங்கடத்தையும் பெங்களூரில் உருவாக்கியிருக்கின்றது. இன்று அதே சாத்திரமும், சூத்திரமும், மைசூரிலும் கையாளப்பட்டியிருக்கின்றது.
இந்த கலவரத்தில் எந்த வகையிலும் தொடர்பற்ற மூவர் காவல்துறையினரின் துவக்கிற்கு பலியாகியுள்ளார்கள்..!!
எப்ப தாண்டா திருந்துவீங்க..!
ஃஃஃஃஃஃஃஃ
ஒத்த கருத்துள்ளவர்களிடையே, ஒப்புதலுடன் நடக்கும் ஓரிணச்சேர்க்கை சட்டவிரோதமில்லை என்று உச்ச நீதி மன்றம் அறிவித்தள்ளது.
அடுத்த பதிவுலகத் (கேள்வி/பதில்) தொடரில், நீங்கள் ஓரிணச்சேர்க்கையில் ஈடுப்பட்டதுண்டா, அதில் ஆர்வமுண்டா என்று கேள்விகள் வருமோ..??
வந்தால் அவற்றை பதிவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்...??
கல்லூரி விடுதிகளில் இதை எதிர்கொண்டவர்கள், ஈடுப்படுத்தப்பட்டவர்கள் (விருப்பத்துடன்/அல்லது விருப்பமில்லாமல்) என்ற பலகதைகள் மறைந்தே/மறைத்தே வைக்கப்பட்டியிருகின்றது (அட நான் படித்த வரைக்கும்). இல்லை 18+ என்று போட்டு, பால் சார்ந்த நகைச்சுவைத் துணுக்குகள் பதிவாக வருவதுப் போல், இவையும் வருமா தெரியவில்லை. பதிவுலகம் மிகவும் முன்னேறிய சமுகமாக நடத்தும் பாவனை இந்த விவகாரத்தில் எப்படி பல்லிளிக்கும் என்று பார்க்க காத்திருக்கின்றேன்.
சட்டவிரோதமில்லை என்று சொன்னவுடன் , அதன் மீது இருக்கும், அழுக்கான ஒரு பாவனை, மக்கள் மனதில் மறைந்துவிடுமா என்ன. இது ஒரு துவக்கம் மட்டுமே. மனதளவில் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது.
ஃஃஃஃஃஃஃ
என்னாத்தைச் சொல்ல 3-7-2009
Subscribe to:
Post Comments (Atom)




5 Comments:
:)
me the first
பதிவு படிச்சிட்டு வரேன்
அட !
///
மங்களூர் சிவா said...
:)
me the first
///
அடடே !
//
மங்களூர் சிவா said...
பதிவு படிச்சிட்டு வரேன்
//
உடன்பிறப்புக்கள் கோயில்மாடாகி ரொம்ப நாளாச்சு ... குறைந்த பட்சம் அடுத்த தலைமுறையாவது காப்பாற்றபடனும் கருணாநிதி குடும்பத்திடம் இருந்து ............ !!!
Post a Comment